Thursday, 7 June 2012

சூரபாகு இட்லிகடை --கிரி பட ரீமிக்ஸ்

"ஒரு நிமிஷம்! ஏண்டா கறிச்சட்டி கோவிந்தா, நாயென்னமோ உன்ன பெரிய சமையக்காரனு நினைச்சேன். ஒரே சமையலையே ஒம்பது நாள் சாப்பிட்டிருக்கையாமே சரி சரி இனிமே அப்படியெல்லாம் பண்ணபிடாது கூடயிருக்க பசங்களையெல்லாம் கூட்டிட்டு வந்து எ இட்லிகடையில சேரப்பாரு."
"ஹோலோ.."
"ஏய் அண்ணே சூரபாகு பேசிகிட்டிருக்கேன்ல அங்கயென்ன பேச்சு"
"அது ஒன்னுமில்லட மச்சா, தானியா ஒரு இளிச்சவாயன் மாட்டிருக்கான் அதா.."
"என்னது தனியாவா!"
"எனது பிஸியாயிருக்கையா அப்ப முடிச்சுட்டு அனுப்பிவைக்கிறேன் நீ பாத்துக்கோ"
"என்னடா, கோவிந்தா தீவாளிக்கு பலகாரம் அனுப்புறமாதிரி சொல்லுறயே"


***********சில நாட்களுக்கு பிறகு*******************"எஜமான், முதுகு இந்த வீங்கு வீங்கிருக்கே எத்தன தட்டு சுட்டுருப்பீங்க""மொதயெனமோ 10 தட்டு இட்லிதான் சுட்டேன் அதுக்கப்புறந்தான் நல்லயிருக்குனு 50 தட்டு சுடச்சொல்லிட்டாங்க.""50 தட்டு இட்லியா...""இதுகூட பரவயில்ல மேலவீதியில ஒரு வீடுயிருக்காம், அதுக்கும் சேர்த்து 85 தட்டு இட்லிசுட்டேன்.""ஆ 85 தட்டு இட்லியா...""கடைசியா ஒரு ஆட்டோவில ஏத்துனானுங்க சரியெல்லாம் முடிஞ்சிருச்சேனு நம்பியேறுனேன் அது நேரா மாட்டுச்சந்திலயிருக்கிற கல்யாணமண்டபத்துக்குள்ள போச்சு அங்க 300 தட்டு இட்லிய மூச்சுத்திணரதிணர சுட்டேன். எல்லாரும் திண்ணுட்டு திருப்பிதிருப்பி சுடச்சொன்னானுங்க ஒரே முதுகு வலி.""ஏ எஜமான் இவ்வளவு இட்லிய நீங்க தனியாவா சுடனும் யாரையாது சேத்துக்கலாம்ல""அது வந்து, சாப்பிடும் போது ஒருத்தன் இட்லி மல்லியப்பூ மாதிரியிருக்குனுட்டான் அதுனால முதுகு வலிக்காத மாதிரியே நடிச்சேன்""இதுயெல்லாத்துக்கும் காரணம் உங்க இட்லிகடை, கடையவே வித்துட்டா?"
"!!!!!!"
{மற்றவை உங்கள் கற்பனைக்கு}

No comments:

Post a Comment