Saturday, 25 August 2012

தெய்வம் வாழ்வது எங்கே..!


இல்லாதவன் இல்லை என்று கேட்கும்
பொது
நீ இல்லை என்றால், " நீயும்
இல்லாதவன் தான்





 
ஒரு பறவை மரத்தின்
கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும்
முறிந்து விடும் என்ற
பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த
கிளையை அல்ல
அதன் சிறகுகளை.

~ உன் மேல்
நம்பிக்கை வை.



 
கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதல
ியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970)



 
இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைந்துகொள்
என்ற கருத்தை அழகாக சொல்லும்
படம்......



 
மாட, மாளிகைகளில்
இல்லாக் கருணை தெருவோரம் கண்டேன்






எங்க காவல்துறையிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்றாங்க அவர்கள் தலை வணங்கும் அதிகாரிகளுக்கு மத்தியில் நான் இவர்களுக்கு தலை வணங்குகிறேன்


 
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே

என்னால் இயலாது என்று ஒரு நாளும்
சொல்லாதே

ஏனெனில் நீ
வரம்பில்லாவலிமை பெற்றவன், உன்னுடைய
உண்மை இயல்போடு ஒப்பிடும்போது,
காலமும், இடமும் கூட
உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்
சாதிக்கக்கூடியவன்.
சர்வவல்லமை படைத்தவன் நீ.

நல்லதோர் ஆரம்பம் .

சிலரின்
விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நமது நேரம் செலவிடபடுகிறது,
மற்றவர்களுக்காக வாழ்வதும் சுகம்
தான் .....







தாயன்பிற்கு நிகரான தந்தை


ஆயிரமாயிரம்
சாட்சிகள்
இருந்தும்
இன்னும் ஆவணப்படுத்தப்படாமல்
இருக்கிறது..
தாயன்பிற்கு நிகரான
தந்தையர்தம் பெருமை..

 

பதிவு -

தாய்---குழந்தை


இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து தன் குழந்தையை காப்பாற்றுவதற்காக தன்னையே கேடயமாக்கி கொண்ட ஒரு தமிழ்த் தாய்......!!!
 


 
தாய்மொழியினைக்
கற்றுக்கொள்ளும்
முன்
தனது
மொழியினைத் தன் தாய்க்குக்
கற்றுத்தருகிறது

குழந்தை..!



மனித உயிர் காக்க கண்டுபிடிக்கப்படும் மருந்தைக் கூட எலியின் உடம்பில் சோதிக்கிறது மருத்துவ உலகம்.

ஆனால்
மனிதம் மறந்த இந்த அயோக்கியர்களின் துப்பாக்கி ரவைகள் சோதிக்கப்படும் இடம் என் உடல் தானோ...!
 



கருவறைக்குள் 
என்னை
சிறையடைப்புச்
செய்தவளே..

இருட்டறைக்குள்
எத்தனைநாள்
எனை பூட்டி வைப்பாய்..?

ஆனால் என்ன ஆச்சர்யம்..!
மூச்சு முட்டவில்லையே..!

புரிந்துவிட்டது-எனக்கு
நீ தந்தது
பாசம் மட்டுமல்ல..
உனது சுவாசமும்தான்..

உன்னை பத்து மாதம்
கடந்து பார்க்க
பொறுமையில்லை..
அதனால்தான்
வந்துவிட்டேன்
எட்டே மாதங்களில்..

வந்து பார்த்த
பின்புதான்
நொந்துகொண்டேன்..
சிரிக்கவேண்டிய
உன் முகத்தில்
ஏனோ வலிகலந்த
வேதனையின் ரேகை..

உன் வயிற்றில்கூட
தையல்ரேகை..

பதறுகிறதென்
பிஞ்சு மனம்..

என் அழுகை சத்தம்
கேட்கிறதா அம்மா உனக்கு..?

இது பால்கேட்டு அழும்
பசியழுகையல்ல..!

உன்னை
வேதனைப்படுத்தி
குறையாய்
பிறந்ததில் வந்த
குற்ற உணர்வழுகை..


இறைவா......
அறியாமல்
நான்செய்த பாவம்
போக்க
ஒரு
சந்தர்ப்பம்கொடு..

நான்
வேண்டுமானால்
திரும்பவும் கருவறை
சென்று
இருமாதம் கழித்து
வருகிறேன்..

-
குறைபிரசவக் குழந்தை




அன்பு மகள்
இட்ட
விபூதியை
அழியாமல்
பார்த்து
கொள்கிறேன்

ஒரு
பகுத்தறிவாளனாய்
இருந்த
போதும் ....




நனைந்தால்
உடம்புக்கு
ஆகாது என்று
வீட்டுக்குள்

பொம்மையை
விட்டுவிட்டு
தான்
மட்டும் சென்று
மழையில்
ஆடுகிறது
குழந்தையின்

தாய் மனசு





குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்ததிலிருந்தே பொய்யும் ஆரம்பிக்கும். பொய் சொல்வதற்கான தண்டனைகளையும் மன்னிப்புகளையும் சௌகரியத்தையும் பொருத்து அந்தத் 'திறமை' வளரும். பொய் இல்லையேல்..? யோசித்துப் பாருங்கள், இலக்கியமே இல்லை, காதல் இல்லை, சண்டை இல்லை, விளம்பரம் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரமே பொய் சார்ந்தது.

கம்பர்
சொன்னது போல் "உண்மை இல்லை பொய் உரை இயலாமையால்"



உம் தாய்மைக்கு தலை வணங்குகிறேன் ... :)




பசும் தங்கம்
புது
வெள்ளி
மாணிக்கம்
மணிவைரம்
அவை
யாவும்
ஒரு
தாய்க்கு ஈடாகுமா
விலை
மீது விலை
வைத்துக்
கேட்டாலும்
கொடுத்தாலும்

கடை
தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா

ஈரைந்து
மாதங்கள்
கருவோடு

எனைத்தாங்கி

நீ
பட்ட பெரும்
பாடு
அறிவேனம்மா
ஈரேழு
ஜென்மங்கள்
எடுத்தாலும்

உழைத்தாலும்

உனக்கிங்கு
நான் பட்ட
கடன்
தீருமா
உன்னாலே
பிறந்தேனே

அம்மா
என்றழைக்காத
உயிரில்லையே

அம்மாவை
வணங்காது
உயர்வில்லையே

நேரில்
நின்று பேசும்
தெய்வம்

பெற்ற

தாயன்றி
வேரொன்று
ஏது


அம்மாவின்
அன்பு ஞாபத்திற்கு





கணவன் மனைவி

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போகும் கணவன் மனைவிகளுக்கு இந்த புகைப்படம் படம் சமர்ப்பணம்..

முடிந்த வரை பகிருங்கள் ..


இதயத்தில் சுமந்தவரை
வறுமை வாட்டினும்
இறுதிவரை உறுதியுடன்
சுமக்கும் இந்த
பாட்டியின் அன்பிற்கு
வார்த்தைகள் இல்லை
வாழ்த்த..!
வணங்குகிறோம் தாயே..!




விரல் இடுக்கில்


 

விரல் இடுக்கில்
சிறைப்பட்டு
உதடுகளுக்குள்
உஷ்ணம் தந்து
உதடு முதல்
இதயம் வரை
குத்தகையில்
கொலை செய்து
சாம்பலாகி
சரணடைந்தாள்
சாம்பல் தட்டில்...!!!

இன்றே விட்டுவிடு

Tuesday, 14 August 2012

இந்தியர்







தேசப்பற்று!!! முகத்தில் மட்டுமல்ல, அகத்திலும் எங்கள் குருதியிலும்
தேசப்பற்று உண்டு எங்களின் முகங்கள் வேறு. வேறாக இருக்கலாம்
மனங்கள்வேறாகயிருக்கலாம் ஆனால். நாங்கள் இந்தியர்கள் என்பதில் எப்போதும்
சேர்ந்தே இருப்போம்..................